The Indian Times

பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை அமலாபால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் அமலாபால்,பின்னர் இவர் நடிப்பில் வெளியாகிய மைனா படம் மாபெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகையாக சினிமாவில் உருவாகினார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் மாற்றி மாற்றி படம் நடிக்க தொடங்கிவிட்டார்.

Advertisement

இப்படங்களை தொடர்ந்து இவர் நடித்த வேட்டை,தெய்வத்திருமகள் படம் எல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தார்.

இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தில் இயக்குனர் ஏஎல் விஜய் உடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.இருவரும் திருமணமும் செய்து கொண்ட நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதில் இருந்து மீண்டு வந்த அமலாபால் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.

தற்போது அமலாபால் குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

இவை பழைய புகைப்படங்களாக இருந்தாலும் மீண்டும் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in