The Indian Times

நீ யாரு என்ன கேட்க? இதெல்லாம் உனக்கு நல்லதுக்கு இல்ல கோபி… எச்சரித்த பாக்கியா.. பாக்யலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.இந்நிலையில் நானும் இனி பாக்கியா வீட்டில் இருப்பேன் நான் தான் கோபி பொண்டாட்டி இனி நம்மளும் இந்த வீட்டில் இருப்போம் என பையுடன் கிளம்பி வருகிறார்.இறுதியாக ராதிகா கோபியுடன் பாக்கியா வீட்டிலேயே தங்குகிறார்.இதனால் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் கோபி ,பாக்கியாவிடம் சென்று இனி ராதிகா விஷயத்தில் தலையிடாதே நான் சும்மா இருக்க மாட்டேன் என கூறுகிறார்,இதனால் கடுப்பாகிய பாக்கியா நா இப்படித்தான் பேசுவேன் என்ன பண்ண முடியும் உங்களால் ,எதுக்கு பழனிச்சாமி வீட்டுக்கு போனீங்க,நீங்க யாரு என்ன கேட்க,இதெல்லாம் உனக்கு நல்லதுக்கு இல்லை என கடுமையாக எச்சரித்துள்ளார் பாக்கியா,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed Video Credits : VIJAY TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in