The Indian Times

செவ்வந்தி சீரியல் கதாநாயகிக்கு வளைகாப்பு நடத்திய செவ்வந்தி SERIAL TEAM

கர்நாடகாவை சேர்ந்தவர் திவ்யா.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் அங்கிருந்து தமிழகத்திற்கு வந்து வாய்ப்பு தேடி சின்னத்திரையில் நாடகங்கள் நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த நாடகங்கள் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியலில் நடித்து வருகிறார்.இவர் தற்போது தனது கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவரது கணவர் சீரியல் நடிகர் அர்னவ்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் அர்னாவ்.இவரின் இயற்பெயர் நைனா முகமது.சினிமாவுக்காக தனது பெயரை அர்னவ் என்று ஸ்டைலாக மாற்றிக்கொண்டுள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த இவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.சன் டிவியில் ஒளிபரப்பாகிய சக்தி என்ற தொடரில் நடித்து சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.தற்போது செல்லம்மா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இவர் திவ்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளதால் கணவர் மீது போலீசில் புகார் கொடுத்தார்.

இவர் புகாரை ஏற்ற போலீசார் அர்னாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.தற்போது இவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.இந்நிலையில் கர்ப்பிணியான திவ்யாவுக்கு அவர் நடிக்கும் செவ்வந்தி சீரியல் நடிகர்கள் வளைகாப்பு நடத்தியுள்ளனர். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் செவ்வந்தி சீரியல் குழுவை அவரை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in