The Indian Times

பாரதியெல்லாம் கல்யாணம் பண்ணிக்க என்னால முடியாது… அவன் ஒரு ஆளு… கடுப்பாகிய வெண்பா.. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடிவந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தினை எட்டி முடிந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது,அந்தளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்துள்ளது.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு தான் பாரதியை சந்திக்கிறார் முதலில் ஏற்பட்ட மோதல் பிறகு நட்பாக மாறியது.கண்ணம்மாவிற்கு பாரதி மேல் காதல் உள்ள நிலையில் தற்போது இந்த நாடகத்திலும் வில்லியாக வெண்பா களம் இறங்கியுள்ளார்.வெண்பாவை பாரதியை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள்,அவ்வாறு வெண்பா பாரதியை திருமணம் செய்துகொண்டால் சொத்து முழுவதும் நமக்கு வந்து விடும் என கணக்கு போடுகிறார்.ஆனால் வெண்பா பாரதியெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது அவன்லாம் ஒரு ஆளு என கூறி அங்கிருந்து செல்கிறார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் என்னது வெண்பாவுக்கு பாரதியை பிடிக்கலையா ஆச்சரியமா இருக்கே என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in