The Indian Times

நான் அவ்வளவு நல்லவன் இல்லை….புது நடுவரை களம் இறக்கிய CWC…பயத்தில் கோமாளிகள்…| Cook with comali

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது.சிறிய செடி போல ஆரம்பித்த இந்த நிகழ்ச்சில் மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் ஆக உருவெடுத்துள்ளது.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து இந்த சீசனில் புதியதாக சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் இணைந்துள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.இதனால் நாளுக்கு நாள் நகைச்சுவையும் போட்டியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த வார ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரையிறுதி சுற்று நடத்தப்பட உள்ளது. இதனை கண்டு போட்டியாளர்கள் உச்ச பயத்தில் உள்ளனர்.ஆனால் வழக்கம் போல் கோமாளிகள் ஜாலியாக உள்ளனர்.ஏற்கனவே நடுவர்களாக செப் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு இருவரும் உள்ளனர்.இந்நிலையில் மூன்றாவதாக புதிய நடுவரை தேர்ந்தெடு அழைத்து வந்துள்ளனர்.அவர் வந்து ஒரு சிரிப்பு சிரித்து நான் அவ்வளவு நல்லவன் இல்லை என கூறி போட்டியாளர்களையும்,கோமாளிகளையும் பயம் காட்டியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணைத்த வார நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in