The Indian Times

ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டி கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.

Advertisement

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்து வருகிறார்.

சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது,அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,இப்படத்தின்படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in