The Indian Times

100 தடவை பார்க்கலாம் பொங்கிய தனுஷ் ரசிகை: திருச்சிற்றம்பலம் PUBLIC REVIEW

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இரண்டாவது மகன் தனுஷ்.துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார்.இதற்கு இவரது கடின உழைப்பே காரணம்.பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார் தனுஷ்.இவர் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த 3 படம் இவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் பாடிய ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாடல் மிக பெரிய அளவு பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து இவர் உலகம் முழுவதும் மிக பிரபலமாகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது தமிழில் மட்டுமில்லாமல்,ஹிந்தி,ஆங்கிலம் என பல மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார்.மேலும் முதல் முறையாக தெலுங்கு படத்திலும் களம் இறங்கி உள்ளார்,தெலுங்கில் சார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் யாரடி நீ மோகினி படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் .சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.கர்ணன் படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக கண்டு வருகின்றனர்.இப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.இப்படத்தினை பார்த்து வெளியே வந்த தனுஷ் ரசிகை படத்தினை 100 தடவை பார்க்கலாம் என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.மேலும் சிலர் படம் ரொம்ப மெதுவாக நகர்கிறது.நடனம் சரியாக அமையவில்லை.பாடல் நன்றாக உள்ளது.என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.கிட்டத்தட்ட 1 ஆண்டுகளுக்கு மேல் கழித்து திரையரங்கில் தனுஷ் படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in