The Indian Times

உங்கள் காலுக்கு என் தோலை செருப்பாக தைத்து போட்டாலும் ஈடாகாது… லியோ வெற்றிவிழாவில் விஜய்

விஜய் – நான் தான் உங்களை நெஞ்சியில் வச்சிருந்தேன் என நினைத்தேன் ஆனால் இப்பொழுது தெரிகிறது உங்களது இதயத்தில் எவ்வளவு பெரிய இடம் எனக்கு கொடுத்துருக்கீங்க என்று,இதுக்கு நான் என்ன செய்யப்போறேன்,என் தோலை உங்க காலுக்கு செருப்பாக தைத்து போட்டாலும் ஈடாகாது.கொஞ்ச நாட்களை சோசியல் மீடியாவுல உங்க கோபம் அதிகமா இருக்கு,அதெல்லாம் வேண்டாம் நாம் யார் மனதையும் புண்படுத்த கூடாது, அப்பா திட்டினால் நாம் யாரிடம் போய் அழ முடியும்,அதை அப்படியே விட்ரனும்.நமக்கு நிறைய வேலைகள் இருக்கு.காந்தி சொன்ன வழியில் போவோம்,பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி போற வழியில் தான் டாஸ்மாக் இருக்கு அதற்காக ரெண்டு பெக் எல்லாரும் போட்டுட்டா போறாங்க,சினிமாவை சினிமாவா பாருங்க, விரல் இடுக்குல தீ பந்தம் இருக்கு என்று சொன்னால் அதனை ஏன் பேனாவாக நினைக்க கூடாது,இப்படி மழுப்பலாக என்னால் சொல்ல முடியும் ஆனால் நான் சொல்லவில்லை,சினிமாவை சினிமாவாகா பாருங்க அப்படி தான் எல்லாரும் பார்க்காங்க

Advertisement

பின்னர் தனது குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார்,இரண்டு பேர் காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க,அங்க யானை ,முயல்,காக்கா ,கழுகு எல்லாரும் இருக்கு,ஒருத்தர் முயல் வேட்டையாடிட்டு வருகிறார் இன்னோருத்தர் வெறும் கையில் வருகிறார் அவரே சிறந்தவர் காரணம் அவர் மிக பெரிய நோக்கத்தை கொண்டு இருக்கிறார் என்பதாகும் .ஒரு பையன் அப்பா சட்டையை போட்டுக்கிடுவான்,வாட்ச் கட்டிக்கிடுவான்,அவன் அப்பா மாதிரி ஆகணும்னு ஆசைப்படுறான் அதுல என்ன தப்பு.புரட்சி தலைவர்னா ஒருத்தர் தான்,சூப்பர் ஸ்டார்ன்னா ஒருத்தர்தான்,உலகநாயகன் ஒருத்தர் தான்,தல ன்னா அது ஒருத்தர் தான் மக்கள் தான் மன்னர்கள் நாங்க உங்கள் தளபதி.நம்மளால ஈஸியா எதை ஜெயிக்க முடியுமோ அது வெற்றி இல்லை ,எதை ஜெயிக்க முடியாதோ அதை ட்ரை பண்ணுகிறோமோ அதான் வெற்றியே.2026ல் கப்பு முக்கியம் பிகிலு என கூட்டத்தை பார்த்து கூறியுள்ளார் விஜய்.மேலும் 20 வயசுல ஒரு பொண்ணு ஹீரோயின் ஆகுறது முக்கியம் இல்லை அதை 20 வருசமா தக்க வைக்கிறது தான் முக்கியம்,அதுவும் அதே எனர்ஜியுடன் நம்ம குந்தவை என த்ரிஷாவை பாராட்டியுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in