The Indian Times

என்ன மன்னிச்சிடுங்க..பாக்கியலட்சுமி சீரியல் விட்டு போய்டலாம்னு…கோபி EMOTIONAL

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.இந்த நாடகத்தில் நடித்ததற்கு இவர் நல்ல வரவேற்பினையும் மற்றும் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளது வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது பாக்கியலட்சுமி நாட கம் மிகவும் சுறுசுறுப்பாக சென்று வருகிறது.கோபிக்கு இருக்கு மற்றொரு வாழ்க்கையை பற்றி பாக்கியாவுக்கு தெரியவருவதால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து விடுகிறார் .இதனால் கோபி பாக்கியாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்

தற்போது கோபியாக நடிக்கும் சதிஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் அவர் கூறியதாவது பாக்கிய லட்சுமி சீரியலில் என்ன நடக்குன்னு பாக்குறீங்கள்ளே ,அடுத்த 5 நாளுக்கு ரொம்ப மோசமா இருக்க போகுது.தெரிஞ்சோ தெரியாமலோ கோபி கேரக்டர் மூலமா உங்க மனச புண்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க,சிலர் என்னை பாராட்டுறாங்க.நடிக்கும் போது எனக்கே கஷ்டமா இருக்கும் சீரியலை விட்டு போய்டலாமான்னு தோணும்,நல்ல பாசிடிவ் கேரக்டர் பண்ணலான்னு தோணும் ஆனா எடுத்த காரியத்தினை முடிக்கவேண்டும் என்பதால் நடிக்கிறேன் என தெரிவித்துள்ளார்

Embed video credits : INDIAGLITZ

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in