The Indian Times

கல்யாணத்தை நிறுத்துங்க… எழில் மனசுல இருக்குறது அமிர்தா.. ஈஸ்வரியை அலறவிட்ட பாக்யலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியாவின் கணவர் கோபி குடும்பத்தை விட்டுவிட்டு அவர் கல்லூரியில் காதலித்த ராதிகாவை கரம்பிடித்துக்கொண்டார்.இதனால் குடும்பம் மொத்தத்தையும் ராதிகா ஒரே ஆளாகா பார்த்து கொண்டு வருகிறார்.இந்நிலையில் எழில் தாங்கள் இருக்கும் வீட்டை கோபியிடம் காசு கொடுத்து வாங்குவதாக சவால் விட்டார்,அதற்காகவும் தற்போது அவர் உழைத்து வருகிறார் இன்னொரு பக்கம் அமிர்தாவை கரம்பிடிக்க போராடியும் வருகிறார்.ஆனால் இவரது அண்ணன் செழியனும் சிவகாமி பாட்டியும் எழிலை அமிர்தாவிடம் இருந்து பிரித்து தயாரிப்பாளர் மகளுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிடுகின்றனர்.

எழில் பாட்டி வர்ஷினியை கல்யாணம் செய்துகொள்ள கூறி எழில் காலில் விழவே உடனே அவரும் குடும்பத்திற்காக காதலை விட்டுக்கொடுக்கிறார்,அமிர்தாவை நேரில் சந்தித்து உன் வாழ்க்கையில் நான் வந்திருக்க கூடாது என கூறி அவரை விட்டு பிரிந்து செல்கிறார்.எழில் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக வர்ஷினியை திருமணம் செய்துகொள்ள தயாராகிறார்,

https://www.youtube.com/watch?v=WePUU6LQpv4

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in