The Indian Times

கொட்டும் மழையில் நடுரோட்டில் மீன் பிடிக்கும் சென்னை வாசிகள்! – Chennai Rain Funny Viral Video

சென்னை என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது வந்தாரை வாழவைக்கும் இடம் என்பதே! ஏனென்றால் பிழைப்பை தேடி, படிப்பை தேடி, காதலை தேடி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கனவோடு கால்வைக்கும் புண்ணிய இடமே சென்னை! பெற்றது அன்னை என்றாலும் வளர்த்தது அன்னை தான் என்று அடுக்குமொழி வசனம் பேசி சென்னையை தூக்கி நிறுத்தும் பிரபலம் பலரையும் நாம் பார்த்திருப்போம்! இப்படி சென்னையின் சிறப்புக்களை சொல்லிக்கொண்டே போகலாம்! அத்தனை சிறப்பு தன்மைகளை தன்னுள்ளடக்கி எத்தனை பேர் தன்னை நம்பி வந்தாலும் அத்தனை பேரையும் வாழ வைத்து அவர்களின் கனவுகளுக்கு உயிர்கொடுக்கும் சென்னைக்கும் சவால்கள் புதிதல்ல! அதில் வெள்ளப்பாதிப்பும் முக்கியமான ஒன்றே!

Advertisement

2015ல் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது! அதற்கும் முன்பு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சுனாமி பேரிடர் என வருடம் தவறாமல் சவாலாக இயற்கை மூலம் சென்னையின் சரித்திரத்தை சீண்டி பார்க்க ஒரு நிகழ்வு வரும்! அப்படி 2021ம் ஆண்டு இறுதியை எட்டும் நிலையில் சென்னையில் மழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கிறது! சவால்கள் ஒருபுறம் இருக்க, அந்த சவாலை சிரிப்புடன் கடக்க மீம்கள் மற்றும் சில நகைச்சுவையான நிகழ்வுகளும் நடந்து வந்த வண்ணம் உள்ளது!

Advertisement

சென்னை வெள்ளக்காடாக மாறிய நிலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வரும் நிலையிலும் சில வாலிபர்கள் நடுரோட்டில் வெள்ளத்தினுள் மீன் பிடிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது! அந்த வேடிக்கையான வீடியோ உங்கள் பார்வைக்காக! Watch The Video Below….

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in