The Indian Times

மகனே நம்ம ஜெயிச்சிட்டோம்… மகனுடன் வெற்றியை கொண்டாடிய அசீம்

தமிழ் தொலைக்காட்சி நடிகர் அசீம்.பல தொலைக்காட்சியில் பல நாடகங்களில் நடித்து அசத்தியுள்ளார் இவர்.இவரின் நாடகங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதுண்டு,ஆனால் இவருக்கான சரியான அங்கீகாரம் ஏதும் கிடைக்கவில்லை.2012 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மாயா நாடகத்தில் நடித்து சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த நாடகத்தினை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரிவோம் சந்திப்போம்,தெய்வம் தந்த வீடு ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.

Advertisement

எதிலும் இவருக்கான வெற்றி கிடைக்கவில்லை,இருந்தும் போராடினார்.அப்படி வந்தது தான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ப்ரியமானவளே தொடர்,இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அடையாளம் கண்டெடுக்கப்பட்டவர் ஆகினார் அசீம்,பின்னர் அங்கிருந்து மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்து பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம் என தொடர்களில் நடிக்க தொடங்கினார்,மேலும் ஜோடி சீசனிலும் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தினை பெற்றுள்ளார் அசீம்.

Advertisement

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக மக்கள் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார் அசீம். அசீம் ஒரு கோவக்காரர்,அதிகம் சண்டையிடுவார் என ஒரு தரப்பு கூறி வந்தாலும் அவருக்கு ஆதரவும் அதே சமயத்தில் இரட்டிப்பாக பெருகி வந்தது.இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கபட்டார் அசீம்.இவர் தனது மகன் மேல் அதிக பிரியம் வைத்துள்ளனர் என்பது தெரிந்ததே,இந்நிலையில் பிக் பாஸ் கோப்பையையும் ,50 லட்சம் ரூபாய் பணத்திற்கான காசோலையும் மகன் கையில் கொடுத்து கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் பெருமளவு வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அஸீமுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in