எனக்கு சிம்பு வேணும்…நடிகர் சிம்பு வீட்டு முன்னாள் நின்று போராட்டம் நடத்திய சீரியல் நடிகையால் பரபரப்பு
சின்னத்திரை நடிகராக வலம் வருபவர் ஸ்ரீநிதி.இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 7C என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.அதன்பின்னர் புதுப்புது அர்த்தங்கள்,யாரடி நீ மோகினி போன்ற நாடகங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சமீப காலமாக இவர் மன அழுத்தத்தில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்தார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மேலும் மதுபான கடையில் பிறந்த நாள் பார்ட்டிக்கு மதுபானங்களை வாங்கி அதனை வீடியோவாக பதிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார்.இவர் தற்போது இவர் செய்த காரியம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.இவருக்கு நடிகர் சிம்புவை ரொம்ப பிடிக்கும் என்பதை அடிக்கடி தெரிவித்து வந்தார்.மேலும் சில தினங்களுக்கு முன்னர் சிம்புவை கல்யாணம் பண்ண இருப்பதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.இவர் சும்மா தான் சொல்கிறார் என்று பார்த்தால் நேற்று திடீரெனெ சிம்பு வீட்டின் முன்பு அமர்ந்து சிம்புவை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்,மேலும் அந்த பதிவில் ,என்னால நம்ப முடியல எனக்காக சிங்கிள் ஆ இருந்துருக்காரு,பாத்துட்டு இருக்குறவங்க எங்களை சேர்த்து வைங்க,லேட்டா தான் புரிஞ்சது,இன்னோருத்தர நான் கல்யாணம் பண்ண மாட்டேன் ,ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராட்டம்,லவ்வுக்கு போராட்டம் இல்லையா என கூறி அவர் வீட்டு முன்னாள் அமர்ந்து போராட்டம் செய்துவருவதாக கூறியுள்ளார்.இவர் இதனை விளையாட்டாக செய்தாரா அல்லது உண்மையாக செய்தாரா என்பது தெரியவில்லை,இவரின் இந்த செயல் பெரும் பரப்பினை ஏற்படுத்தியுள்ளது
Embed video credits : Behindwoodstv
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
1 Comment
Aisha — 24/5/2022
Seriously! This girl needs to grow up!