The Indian Times

கூட்டத்தில் தமன்னா தமன்னா என வெறித்தனமாக கத்திய பெண்… தமன்னா செய்த செயலால் கலங்கிய ரசிகை

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்,இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது இவர் நடித்துள்ள நிறைய ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கின்றன.இந்த ஆண்டு இந்த படங்களின் மூலம் இவர் மீண்டும் முன்னணி நடிகை என்ற பட்டத்தினை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்.தமிழ் படங்களில் படவாய்ப்புகள் மற்றும் கதைகள் சரியாக அமைவதில்லை என்பதால் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Advertisement

தற்போது இவர் சென்னையில் உள்ள பிரபல நகை கடை திறப்புவிழா ஒன்றுக்கு சென்றுள்ளார்.அங்கு இவரை காண ஏகப்பட்ட கூட்டம் அலைமோதியது.இந்த கூட்டத்தில் தமன்னாவை பார்த்த தீவிர ரசிகை ஒருவர் தமன்னா தமன்னா என கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.அவரை பார்த்த தமன்னா அவரை அழைத்து அவருடன் செல்பி எடுத்து ,மகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோவை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in