The Indian Times

தங்கமே உன்ன நான் எப்போவுமே love பண்ணுவேன்..தாலி கட்டியபின் மனைவி நயன்தாராவை முத்தமிட்ட விக்னேஷ் சிவன்

நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனுக்கும் இடையே இருக்கும் காதல் அனைவரும் அறிந்தது.இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தினை இயக்கினார்.இப்படத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.தற்போது இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகையும் வெளி உலகையும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.மேலும் இருவரும் இணைந்து சொந்தமாக ரவுடி பிக்சர் எனும் தயாரிப்பு நிறுவனமும் வைத்து நல்ல தரமான படங்களை தயாரித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இருவரும் அடிக்கடி கோவில் மற்றும் சுற்றுலா சென்று புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.இவர்கள் பதிவேற்றும் இந்த புகைப்படங்கள் தான் அன்று இணையத்தில் பேசப்படும் முக்கிய பேசுபொருளாக மாறுகிறது,அந்த அளவிற்கு இவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.எப்பொழுது இவர்கள் திருமணம் செய்துகொள்ளுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.ஜூன் 9 ஆம் தேதி இன்று இருவருக்கும் திருமணம் என இரண்டு நாட்களுக்கு முன்னதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.

Advertisement

தற்போது விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இன்று இந்து முறைப்படி திருமணம் செய்ய உள்ளனர்.
இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு திருமணம் சென்னை மகாபலிபுரம் அருகே sheration grand விடுதியில் மிகவும் நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே நடைபெறுகின்றது.தற்போது திருமணம் முடிந்த உடன் நயன்தாராவுக்கு காதலுடன் முத்தம் கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன் தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

Embed video credits: Little Talks

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in