The Indian Times

இயக்குனரை திருமணம் செய்துகொண்டாரா மீரா மிதுன்…கோவிலில் மாலையுடன் நிற்கும் புகைப்படத்தினால் குழம்பிய ரசிகர்கள்

மாடல் அழகியான மீரா மிதுன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகிறார்.இவர் மீது ஏற்கனவே ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் குதித்தார்.மேலும் சில படங்களில் நடித்துள்ளார்.அங்கிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்துகொண்டு அனைவரையும் ஒரு கலக்கு கலக்கினார் மீரா மிதுன்.இவர் தன்னை தானே சூப்பர் மாடல் என சொல்லிகொள்வதால் இவரை நெட்டிசன்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் ஜாதிகளை பற்றி அவதூறாக பேசிய மீரா மிதுன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் ஜாமீனில் வெளிவந்தார் ,இந்த வழக்கில் இவர் மீதும்,இவரது ஆண் நண்பர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் விசாரணைக்கு ஆஜராகாத மீரா மீது மீண்டும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.இப்படி அடுக்கடுக்காக பிரச்சனையில் மீரா மிதுன் சிக்கியதால் வருமானமின்றி மிகவும் தவித்து வந்தார்.இந்நிலையில் தான் செய்த அணைத்து தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

Advertisement

இந்நிலையில் மீரா மிதுன் இயக்குனர் ஒருவருடன் மாலையுடன் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த இயக்குனர் யார் என்றால்,மீரா மிதுன் கதாநாயகியாக நடிக்கும் பேய காணோம் படத்தின் இயக்குனர் அன்பரசன் ஆகும்.இவர்கள் கோவிலில் எடுத்த இந்த புகைப்படம் அவர்கள் திருமணம் செய்துகொண்ட பொழுது எடுக்கப்பட்டது என பலதரப்பில் இருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.உண்மையான காரணம் இதுவரை என்ன என்பது தெரியவில்லை மேலும் இது படத்தின் ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in