The Indian Times

யோவ் என்னய்யா படம் பண்ணி வச்சிருக்கே…மாதவனிடம் கேட்ட ஏ ஆர் ரஹ்மான்..அதிர்ந்த மாதவன்

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்.ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கிறவர்.1996 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இதனை தொடர்ந்து இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகினார் .இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு தொடர் வெற்றியை பெற்றுக்கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வந்தார்.இவர்க்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம் உள்ளனர் தற்போது வரை என்றால் மிகையாகாது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு,கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தினை எடுத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் சிம்ரன் நடித்துள்ளார்.விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இப்படத்தினை உருவாக்கியுள்ளார் மாதவன்.கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.பல ரசிகர்களும் மாதவனை பாராட்டி வருகின்றனர்.அண்மையில் படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் படத்தினை பாராட்டி மாதவனையும் பாராட்டி இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

Advertisement

அதன்படி இப்படத்தினை பார்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் நடிகர் மாதவனை வெகுவாக பாராட்டியுள்ளார்.ஏ ஆர் ரஹ்மானே நம்மளை பாராட்டிவிட்டாரே என மாதவன் ஒரு நிமிடம் அதிர்ந்துள்ளார்.இந்த வீடியோவை நடிகர் மாதவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து மாதவனை மேலும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.மீண்டும் மாதவன் இயக்குனராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.மக்களிடம் இருந்து முழுக்க முழுக்க நல்ல வரவேற்பு வந்துள்ளதால் மாதவன் மகிழ்ச்சியின் உச்சத்திலேயே உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in