The Indian Times

இந்தவாரம் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர் இவர்தான்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த வாரம் முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.வழக்கம் போல இந்த சீஸனும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

தற்போது இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் எலிமினேஷன் சுற்று நடைபெற்றுள்ளது. இதில் தப்பிக்க போட்டியாளர்கள் கடுமையாக சமைத்தும் எலிமினேஷன் சுற்றில் கிஷோர்,காளையன் மற்றும் ஷெரின் ஆகியோர் வந்தனர்,இதில் இயக்குனர் கிஷோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது,கிஷோர் தான் கோமாளிகளுக்கு இணையாக நிகழ்ச்சியில் காமெடி செய்து வருகிறார். இவரும் போய்விட்டாரா ஏன் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in