The Indian Times

மாவட்ட ஆட்சியர் ஆக மாறிய அபி… ஜெயிலில் இருந்து வெளிவந்த வெற்றி… 6 வருடத்திற்கு பிறகு தொடருமா காதல்… THENDRAL VANTHU ENNAI THODUM

விஜய் தொலைக்காட்சியில் நாடகத்தினை காண்பதற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,இந்த ரசிகர்களுக்காக புது புது நாடகங்களை களம் இறக்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.அப்படி இதில் வெற்றித்தொடர்களாக ஓடிக்கொண்டிருக்கும் ராஜாராணி,பாரதி கண்ணம்மா,ஈரமான ரோஜாவே,மௌனராகம் போன்ற சீரியல்களில் வரிசையில் உள்ளது தான் இந்த தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்.இதில் வினோத் பாபு மற்றும் பவித்ரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த தொடரின் மூலம் இருவரும் தமிழக மக்களின் இதயத்தில் தனி இடத்தினை பிடித்துள்ளார்கள் எனலாம்,அந்தளவிற்கு கணவன் மனைவியாக நடித்து அசத்தியுள்ளார்கள்,இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் அற்புதமாக இயக்குனரால் வடிவமைக்கப்பட்டது இந்த தொடரின் வெற்றிக்கு காரணம்,தற்போது இந்த தொடரை முடிவுக்கு கொண்டு வந்து மீண்டும் 6 வருடத்திற்கு பிறகு உண்டான கதையை ஆரம்பித்துள்ளது படக்குழு.6 வருடத்திற்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளிவருகிறார் வெற்றி.

இந்த 6 வருடத்திற்குள் அபி மாவட்ட ஆட்சியராக மாறுகிறார்.இருவருக்கும் இடையேயான காதல் எப்படி இருக்கும் இனிமே என்பதை காண்பிக்கிறது இந்த ப்ரோமோ.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இருப்பினும் நெட்டிசன்கள் துள்ளாத மனமும் துள்ளும் படத்தினை எடுத்துவச்சிட்டு விஜய் தொலைக்காட்சியின் புதிய முயற்சின்னு சொல்லுறீங்களே என கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in