The Indian Times

முகத்தில் ரத்தத்துடன் அமர்ந்து இருக்கும் கீர்த்தி சுரேஷ்..பதறிய ரசிகர்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் தான் முதன்முறையாக நடித்தார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.ரஜினி முருகன் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.கீர்த்தி சுரேஷ் வீடியோ கீழே உள்ளது.

Advertisement

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை வெகு அதிகமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார்.இவர் தற்போது தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் மே 6 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Advertisement

ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .இவர் நடிப்பில் வெளியாகிய சாணிக்காயிதம் படத்தில் இதுவரை நாம் கண்டிராத புதிய கீர்த்தி சுரேஷை அனைவரும் பார்த்திருப்போம்.இந்த படத்தில் இவர் பொன்னி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்,இந்த பொன்னி கதாபாத்திரம் ஆக மாறுவதற்கு இவர் பல மணி நேரம் மேக்கப் போட்டுள்ளார்.இணைத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை திடீரென பார்த்த கீர்த்தி ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என்று பதறிவிட்டனர்.பின்புதான் தெரிகிறது அவர் மேக்கப் போட்டுள்ளார் என்பது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in