The Indian Times

இதோடு நிறுத்திவிடுங்க…. நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பான எச்சரிக்கை

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல அண்மையில் கொண்டாடினர். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் கடுமையாக உழைத்து வருகிறார் ரஜினிகாந்த்.இப்படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில் ரஜினிகாந்த் பெயர்,புகைப்படம் மற்றும் குரலை அனுமதி இன்றி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து ரஜினி வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,நடிகர் ரஜினிகாந்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்துவதாகவும்,அதனை வர்த்தக ரீதியில் பயன்படுத்துபவர்க்கு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in