The Indian Times

நாயுடன் தான் சமந்தா சாக போகிறார் என கூறிய நபருக்கு சிறப்பான தரமான பதிலடி கொடுத்த நடிகை சமந்தா

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு,கன்னடம் போன்ற சினிமா உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலெடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்து மாபெரும் வரவேற்பினை பெற்றார்.தற்போது பல முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துவிட்டார்.

Advertisement

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படமான குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

Advertisement

இவர் அடிக்கடி தனது செல்ல பிராணிகளுடன் புகைப்படம் பதிவிடுவது வழக்கம்.மேலும் தனது நாய்குட்டிகளுடன் உடற்பயிற்சியும் செய்து வீடியோ வெளியிடுவார்.இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அன்று இணையத்தில் வைரலாவது வாடிக்கையான ஒன்றே.இவர் தனது நாய்குட்டிகளுடன் புகைப்படம் பதிவிட்டதை பார்த்த ஒருவர், கடைசியில் அவர் நாய் மற்றும் பூனைகளுடன் தான் சாகப்போகிறார் என பதிவு செய்துள்ளார்.அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா அப்படி நடந்தால் சந்தோஷம் என கருத்து தெரிவித்துள்ளார்.இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in