The Indian Times

கணவர் பிரசன்னா உடன் பயங்கர ROMANCE செய்யும் சினேகா… அடடே பார்க்கவே எவ்வளவு CUTE -ஆ இருக்காங்க ரெண்டு பேரும்

மானசி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் சினேகா.பின்னர் தமிழில் இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.அதன்படி 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.இவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளது.கணவன் குழந்தை என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்

Advertisement

தற்போது சினேகா தனது கணவருடன் எடுத்த கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்,புகைப்படத்தில் கணவருடன் அதிக ரோமன்ஸ் செய்து அசத்தியுள்ளார் சினேகா.இந்த புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ரசிகர்களிடம் இந்த புகைப்படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,புகைப்படத்தில் சினேகா பிரசன்னா ரோமென்ஸை கண்டு ரசிகர்கள் சூப்பர் ,இப்போவும் அதே காதலுடன் இருக்கிறீங்களே வாழ்த்துக்கள் என கூறி கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in