The Indian Times

உதயநிதி ஸ்டாலினால் தான் சினிமாவில் பிரச்சனை?- பாக்யராஜ் ஆவேசப்பேச்சு

இயக்குனர் பாரதிராஜாவிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக விஸ்வரூபம் எடுத்தவர் பாக்கியராஜ்.பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து நடிகர் மற்றும் இயக்குனர் என இரண்டிலும் கொடிகட்டி பறந்தவர் இவர்,16வயதினிலே என்ற படத்தின் மூலம் நடிகராக பாக்கியராஜ் களம் இறங்கினார்.1979 ஆம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் பெரும் வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் மூலம் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் பாக்யராஜ்.இவரது மகன் சாந்தனு.சிறுவயதில் இருந்தே படங்கள் நடித்து வந்தாலும் தந்தையை போல சினிமாவில் இதுவரை அவர் உயரவில்லை.தற்போது பாக்யராஜ் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்

Advertisement

இந்நிலையில் இவர் அண்மையில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ,சினிமாவில் உதயநிதி ஸ்டாலினால் தான் பிரச்சனை எல்லா படத்தையும் அவர்களே வெளியிடுறாங்க என என் காதுபடவே நிறைய பேர் பேசி வருகின்றனர்,ஆனால் அது உண்மையில்லை,இவர்களால் பல படங்கள் வெளியாகிறது,பல படங்கள் நல்ல வரவேற்பினை பெறுகிறது,ரெட் ஜெயண்ட் சினிமாவுக்கு நல்ல விஷயத்தினை மட்டும் தான் செய்கிறது என ஆவேசமாக கூறியுள்ளார்

Embed video credits : Tamil Glitz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in