The Indian Times

வெற்றியை குடும்பங்களுடன் கொண்டாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் புகைப்படங்கள் இதோ

மக்களை அதிகம் கவர்ந்த விளையாட்டுகளுக்குள் ஒன்று கிரிக்கெட். இந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு என்று பெரும் ரசிகர்கள் உலகம் முழுவதும் கூட்டமே உள்ளது,அதுவும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை விட குறிப்பாக ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் சற்று அதிகம் என்று தான் கூறவேண்டும்.அந்தளவுக்கு ஐபிஎல் மக்கள் மனதுடன் ஒன்றியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது,தற்போது 16வது ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது,ஒவ்வொருநாளும் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறி கொண்டே சென்றது.

Advertisement

இந்த போட்டியில் சுமார் 10 அணிகள் நேருக்கு நேர் மோதி விளையாடின.

தற்போது ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் மோத இருந்த நிலையில் மழை காரணத்தினால் தடைபட்டது.தற்போது இந்த போட்டி நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisement

இதில் குஜராத்தை எதிர்த்து சென்னை அணி விளையாண்டது,15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.இதுவரை 5 முறை கோப்பையை வென்ற பெருமையை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இந்த அணியின் வீரர்கள் தங்களது குடும்பத்துடன் வெற்றியை கொண்டாடியுள்ளனர்,அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

ரசிகர்களும் இவர்களுடன் சேர்ந்து வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL