The Indian Times

தனுஷ் பட பாடலை கேட்டு கதறி அழுத ஷகிலா Mummy !

சினிமாவில் ஒரு காலத்தில் கிளமெராக நடிக்கும் நடிகை என்று கூறினாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது நடிகை ஷகிலாவாக தான் இருந்தது. ரசிகர்கள் இவரை அப்படி பார்த்த காலம் போய் இன்று ஒவ்வொரு ரசிகரும் இவரை அம்மாவாக பார்த்து வருகின்றனர். ஷகிலாவிற்கு இந்த புகழை தேடி தந்தது விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். ஷகிலா ஒரு காலத்தில் கவர்ச்சியான நடிகையாக நடித்து கொண்டிருந்தார் , காலப்போக்கில் சில படங்களில் துணை நடிகையாக ஒரு சில

Advertisement

காட்சிகளில் நடித்தார் ஷகிலா. அதன் பிறகு இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிறகு இவரது மற்றொரு பக்கத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துரைத்தது. அனைவருடனும் சேர்ந்து ஜாலியாக சமைத்து தன்னுடைய திறமை மூலம் போட்டியின் இறுதி வரை சென்றார் ஷகிலா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரை அனைவருமே ஷகிமா என்று தான் ஆசையாக அழைத்து வருகின்றனர்.

இது போக இவர் தனக்கென ஒரு யுடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் அவ்வப்போது வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் ஷகிலா. இந்நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அசுரன் படத்தில் வரும் எள்ளுவைய பூக்களையே என்ற பாடலுக்கு கண்கலங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to The Shakila youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in