The Indian Times

ராஜ் கிரண் என்னை வீட்டில் வேலைக்காரியாக வைத்திருந்தார்…என்னை வாழவிடுங்கள் என கெஞ்சிய ராஜ்கிரண் மகள் ஜனத் பிரியா

நடிகர் ராஜ்கிரண் தமிழ் சினிமாவை 90களில் கலக்கியவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது.முன்னணி நட்சத்திரங்களுக்கு இணையாக ராஜ்கிரண் படம் வசூல் சாதனை படைத்தது.1989 ஆம் ஆண்டு என்னை பெத்த ராசா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களம் இறங்கினர்.தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார் ராஜ்கிரண்.தற்போதும் படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வயது காரணமாக ராஜ்கிரண் தற்போது கதாநாயகர்களுக்கு அப்பா,மாமா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.தற்போது ராஜ்கிரண் மகள் பிரியா வீட்டை விட்டு வெளியேறி தான் காதலித்து வந்த முனீஸ் ராஜா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இந்த திருமணத்திற்கு ராஜ்கிரண் சம்மதம் தெரிவிக்கவில்லை எனவும் அதனால் வீட்டை விட்டு வெளியேற காதலித்தவரை கரம்பிடித்துவிட்டதாகவும் அவரது மகள் கணவர் முனிஸ்ராஜா உடன் சேர்ந்து தெரிவித்திருந்தார்.

Advertisement

தற்போது ராஜ்கிரண் மனைவி அவர்களது வளர்ப்பு மகள் வீட்டில் இருந்து 17 சவரன் நகைகளை திருடி சென்றுவிட்டார் என புகார் அளித்திருந்தார்.இந்த புகார் குறித்து போலீசார் ப்ரியா மற்றும் முனீஸ் இருவரையும் விசாரித்தனர்.விசாரணை முடிந்து வெளியே வந்த பிரியா கூறியதாவது,எனது தாத்தா பாட்டி நகைகள் அவர்களிடம் உள்ளது அது எனக்கு வேண்டும்,ராஜ் கிரண் என்னை வீட்டில் வேலைக்காரியாக தான் வைத்திருந்தார்,என்னை வாழவிடுங்கள் என கெஞ்சியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ராஜ்கிரணா இப்படி செய்தது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Embed video credits : POLIMER NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in